Tuesday, December 14, 2010

விதியை வென்றவன்



கண் இமைகள் திறந்தால்
என் இதயம் துடிப்பதே நின்று விடும்
என் ஏனில் என் முன்னால் நீ இல்லை

கண் இமைகள் மூடி பார்கிறேன் அங்கு நீ
என் நினைவுகளில் தெரிகிறாய்
இப்போது நீ துர‌ம் இல்லை இன்னும் நெருக்கமே

கண்கள் கலங்கின்றது உனை கண்ட சந்தோசத்தில்
என் கண்ணீருக்குள் மூழ்கி நீ மூச்சு திணறுவது கண்டு
என் மூச்சு காற்றையே நிறுத்தி விட்டேன்

உனை ம‌றந்தோ நினைத்தோ வாழ‌ முடிய‌வில்லை
என்னவளே விதி உனை முந்தி விட்டது
உனை வென்ற‌ விதியை நான் தோற்கடித்து விட்டேன்
 

No comments:

Post a Comment