Tuesday, December 14, 2010

உலக திரை


தாயில் சிறந்த கோவில் இல்லை
முதியோர் இல்லங்கள் மூலைக்கு ஒவ்வொன்று

குழந்தையும் தெய்வ‌மும் ஒன்று
குழ‌ந்தைக‌ள் குப்பை தொட்டியில் தெய்வ‌ம் கோவிலில்

கூடி வாழ்ந்தால் கோடி ந‌ன்மை
ம‌ர‌ண‌ செய்தி கேட்டும் உற‌வுக‌ள் காண கிடைப்ப‌தில்லை

சிரித்து வாழ் பிற‌ர் சிரிக்க‌ வாழ‌தே
ந‌கைச்சுவை பார்த்து சிரிக்க‌ முய‌ற்ச்சி ந‌ட‌க்கிற‌து

உழைத்து வாழ் பிற‌ர் உழைப்பில் வாழதே
வெளியால் சொல்லாதிர்க‌ள் ப‌யித்திய‌ம் என்பார்க‌ள்

வாழ்வென்றால் போராடும் போர்க‌ளமே
உயிர் கொள்ளும் போராட்ட‌ம் உல‌க‌ நாடுக‌ள் ச‌ங்கூத‌ல்

ந‌ட்பை கூட‌ க‌ற்பை போல‌ என்னுவேன்
வெறும் க‌விதைக‌ளில் ம‌ட்டும் உண்மை ந‌ட்பு வாழ்கிற‌து

ஆண் என்ன‌ பெண் என்ன‌ எல்லாம் ஓரின‌மே
ஆம் ஆண் பெண் வித்தியாச‌ம் சொன்னால் ம‌ட்டுமே

காத‌ல் இல்லாத‌து ஒரு வாழ்க்கை ஆகுமா
காத‌ல் போதும் என்று க‌ல்யாணம் வேண்டாம்

க‌ல்யாணம் ஆயிர‌ம் கால‌த்து ப‌யிர‌ம்மா
விவாக‌ர‌த்து வ‌ழ‌ங்க‌ நீதிம‌ண்ற‌ங்க‌ள் இடைவிடா உழைப்பு

கால‌ம் க‌லிகால‌ம் ஆகி போய்ட்டு க‌ம்பீயுட்ட‌ர் க‌ட‌வுள்
தொழில் நுட்ப‌ புர‌ட்ச்சியில் ம‌னிதாபிமான‌ம் மூல‌த‌னம்

த‌மிழா த‌மிழா நாளை ந‌ம் நாடே
த‌மிழ‌ன் அழிய‌ த‌மிழன் கார‌ண‌ம் தமிழ் பேச‌ நா கூசுகிற‌து

வாழ்க்கை எனும் மேடைத‌னில் நாட‌ங்க‌ள் ஓராயிர‌ம்
உல‌க‌ திரையில் நாம் தான் மிக‌ பெரும் ந‌டிக‌ர்க‌ள்.
 

யாரும் நோக‌ அடிக்க‌ இக் க‌விதை இல்ல‌
இக் க‌விதை வ‌ரிக‌ளில் ஏதொ ஒரு இட‌த்தில் நான் கூட‌ கதாநாயகன்
நீங்க‌ள் இதில் இட‌ம் பிடிக்காம‌ல் இருக்க‌லாம்
இன்னும் ம‌னித‌ம் வாழ‌ உங்க‌ளை போன்ற‌வ‌ர்க‌ள்தான்
கார‌ண‌ம் என் கூறி ந‌ன்றி கூறுகிறேன்

No comments:

Post a Comment