Tuesday, December 14, 2010
என் பிரிவுகள் பல சில பிரிவுகள் இங்கே
தாய் மடி விட்டு தரணி கண்டேன் அன்று
என் தாயின் சுவாசம் பிரிந்தேன்
தரை தவழ்ந்து பின் தரை நடந்தேன் அன்று
என் மழலை பருவம் பிரிந்தேன்
தாய் தந்தாள் உணவு தன் கையால் அன்று
அச்சுவை பிரிந்தேன் இன்று
வீடு விட்டு பள்ளி சென்றேன் அன்று
சுகமாக தூங்கும் தூக்கம் பிரிந்தேன்
பள்ளி விட்டு கல்லூரி சென்றேன் அன்று
பள்ளியை பழகியவரை பிரிந்தேன்
பிறந்த நாடு விட்டு பிற நாடு வந்தேன் அன்று
என்னை தவிர அனைத்தும் பிரிந்தேன்
வாழ்கிறேன் இன்னும் உயிருடன்
இன்னும் எத்தனை பிரிகளோ
வாழ்ந்து முடிப்பேன் ஒரு நாள் அன்று
என் உடல் இவ் உலகம் பிரிவேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment