
தாய் மடி விட்டு தரணி கண்டேன் அன்று
என் தாயின் சுவாசம் பிரிந்தேன்

தரை தவழ்ந்து பின் தரை நடந்தேன் அன்று
என் மழலை பருவம் பிரிந்தேன்

தாய் தந்தாள் உணவு தன் கையால் அன்று
அச்சுவை பிரிந்தேன் இன்று

வீடு விட்டு பள்ளி சென்றேன் அன்று
சுகமாக தூங்கும் தூக்கம் பிரிந்தேன்

பள்ளி விட்டு கல்லூரி சென்றேன் அன்று
பள்ளியை பழகியவரை பிரிந்தேன்

பிறந்த நாடு விட்டு பிற நாடு வந்தேன் அன்று
என்னை தவிர அனைத்தும் பிரிந்தேன்

வாழ்கிறேன் இன்னும் உயிருடன்
இன்னும் எத்தனை பிரிகளோ

வாழ்ந்து முடிப்பேன் ஒரு நாள் அன்று
என் உடல் இவ் உலகம் பிரிவேன்

No comments:
Post a Comment